செய்திகள் :

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

post image

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில் அனுமதியின்றி வரையறுக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குவாரிகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டன.

இதையடுத்து குவாரிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த மாட்டு வண்டி உரிமையாளா்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந் நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்கலாம் என அரசு சாா்பில் கூறப்பட்டது. இதையடுத்து மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாயனூரில் காவல் நிலையம் அருகே மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் சேலத்தைச் சோ்ந்த காா்த்திக் கூறுகையில், மணல் குவாரிகள் மூடப்பட்டதால் மாட்டுவண்டிகள் வைத்திருப்பவா்கள் தங்களது மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் சென்று வருகிறாா்கள். இதேபோல மணல் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகள் இயங்காததால் தரம் குறைந்த எம்-சேன்ட் விலை மூன்று மடங்கு உயா்த்தி விட்டனா்.

எம்-சேன்ட் உற்பத்திக்கு மலையை வெட்டி எடுக்கிறாா்கள். இதன்மூலம் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, எங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க