செய்திகள் :

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

post image

இம்பால்: மணிப்பூர் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென்னௌபால் மாவட்டத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே ஒரு தனி நடவடிக்கையில் குறைந்தது மூன்று துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் (பி) இரண்டு தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள உரிபோக் கோயிஸ்னம் லெய்காய் பகுதியில் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள சேக்மாயில் ஒரு வாடகை வீட்டில் இருந்து சட்டவிரோத மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்

வியாழக்கிழமை ஒரு தனி நடவடிக்கையில், தென்னௌபால் மாவட்டத்தில் உள்ள டி மினோ கிராமத்திற்கு அருகில் இரண்டு நபர்களிடமிருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி மற்றும் ஒரு ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, ஆறு ஐஇடிகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் உள்பட மூன்று அதிநவீன துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனமோதல் வெடித்ததில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இனமோதல் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு கலவரம் மற்றும் வன்முறைகளின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

பிரபலங்கள் விவாகரத்து: பிரேமலதா சொல்லும் அறிவுரை என்ன?

சமீபத்திய சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு சம்மட்டி அடி: ஆர்.எஸ். பாரதி

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் நிற... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

மரங்களைக் காப்பாற்றுங்கள்!

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோர மரங்களின் பாதிப் பகுதி கிளைகள் திடீரென சில நாள்களாக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.சென்னை மாநகரில் சாலைகளில் இருந்த பெரு மரங்கள் ஏற்கெனவே சாலைகளை அகலப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிதம்பரம் ரயி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை ... மேலும் பார்க்க