செய்திகள் :

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

post image

இம்பால்: மணிப்பூர் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென்னௌபால் மாவட்டத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே ஒரு தனி நடவடிக்கையில் குறைந்தது மூன்று துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் (பி) இரண்டு தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள உரிபோக் கோயிஸ்னம் லெய்காய் பகுதியில் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள சேக்மாயில் ஒரு வாடகை வீட்டில் இருந்து சட்டவிரோத மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்

வியாழக்கிழமை ஒரு தனி நடவடிக்கையில், தென்னௌபால் மாவட்டத்தில் உள்ள டி மினோ கிராமத்திற்கு அருகில் இரண்டு நபர்களிடமிருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி மற்றும் ஒரு ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, ஆறு ஐஇடிகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் உள்பட மூன்று அதிநவீன துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனமோதல் வெடித்ததில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இனமோதல் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு கலவரம் மற்றும் வன்முறைகளின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே 'கட்டுப்பாட்டை மீறியது'தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.மதுரையி... மேலும் பார்க்க

தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்

மதுரை: திமுக இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ... மேலும் பார்க்க

சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரு... மேலும் பார்க்க

ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி

ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இ... மேலும் பார்க்க

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில... மேலும் பார்க்க