செய்திகள் :

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

post image

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து மக்களவையில் எம்பிக்கள் இன்று விவாதித்தனர்.

இதையும் படிக்க : நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

இந்த விவாதத்தில் திமுக சார்பில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது:

”வடகிழக்கில் உள்ள 7 சகோதரிகளில் ஒரு சகோதரி ஒன்றை ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி 250க்கும் மேற்பட்டோர் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 60,000 பேர் சொந்த மாநிலங்களிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டு, தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 15,000 மாணவர்களின் கல்வி பறிபோகியுள்ளது.

இத்தகைய விவாதத்தின்போது, பிரதமர் அவைக்கு வரவேண்டியது அவசியம் இல்லையா? மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் பிரதமர், தன்னை செளகிதார்(பாதுகாவலர்) என்கிறார்.

உக்ரைன் பிரச்னையை தீர்த்துவைக்க முனைப்பு காட்டும் பிரதமர், சொந்த நாட்டில் உள்ள சிறிய மாநிலத்தின் பிரச்னையை தீர்க்க வலுவில்லையா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

கார்ப்ரேட் முதலாளிகளின் இல்ல நிகழ்வுக்கு விரைந்து செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல மனமில்லையா? ஏன் செல்ல மறுக்கிறார்? மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட மறுக்கிறார் என்பதை விளக்க வேண்டும்.

பாஜக அரசின் அரசியல் ஆதாயத்துக்காக குக்கி சமூக மக்களின் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது. அதனால்தான் வன்முறையை மத்திய அரசு தீர்த்து வைக்காமல் இருக்கிறது.

குக்கி இன பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காணொலியை உலகமே பார்த்ததே, இது எந்த மாதிரியான நாகரீகம்? இதுதான் இரட்டை என்ஜின் அரசின் செயல் திறனா?

தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர் என்று மத்திய அமைச்சர் கூறிகிறார். இதுதான் உங்கள் நாகரீகமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகம்: தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க

1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள்!

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க