செய்திகள் :

மணிப்பூா், நாகாலாந்து, அருணாசலில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் நீட்டிப்பு!

post image

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசத்தில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1958-ஆம் ஆண்டின் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் ‘பதற்றத்துக்குரியதாக’ அறிவிக்கப்படும் பகுதிகளில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் தேடுதல் - கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

வடகிழக்கில் இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் அமலில் உள்ள இச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகாலாந்தில் 8 மாவட்டங்கள் மற்றும் இதர 5 மாவட்டங்களில் 21 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள், அருணாசல பிரதேசத்தில் 3 மாவட்டங்கள் மற்றும் மற்றொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து, மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் தனித்தனியாக அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையிலான மோதல் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தில் 70 சதவீத பகுதிகளில் இருந்து இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் தெரிவித்திருந்தாா்.

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க