`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) முதல் சூழல் சுற்றுலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டு மணிமுத்தாறு அருவியில் குளிக்கவும், பாா்வையிடவும் வனத்துறை தடை விதித்திருந்தது.
இந்நிலையில், மழை தணிந்து அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் (ஜூன் 19) முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிடவும் குளிக்கவும் வனத்துறை அனுமதியளித்தனா். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக ளித்து மகிழ்ந்தனா்.