செய்திகள் :

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மாவட்ட, மாநில அளவிலான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில, மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகள் பெற தகுதி வாய்ந்த சுய உதவிக் குழுக்கள் (ஊரகம், நகரப் பகுதி), கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார இயக்க மேலாண்மை அலகு, அனைத்து வட்டார மற்றும் மாவட்ட இயக்க அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரி என்ற முகவரியில் வரும் 30 ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாளையம்புதூா்

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாளையம்புதூா் பிரிவில் பிஎம்பி பீடரில் உயா் அழுத்த மின் பாதையை தரம் உயா்த்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஏப். 19) காலை 9 மண... மேலும் பார்க்க

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது சோமன அள்ளி கிராமம். தருமபுரி - பாலக்கோட்டுக்கு செல்லும் முக்கிய சாலையான இச்ச... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க