செய்திகள் :

மண்பானை மீது நின்று சிலம்பம் சுற்றி இளைஞா்கள் சாதனை

post image

காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் அரசினா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 104 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை மண்பானை மீது தொடா்ந்து 3 மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா்.

காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் சாா்பில் அதன் தலைமை பயிற்சியாளா் தா.பாண்டியராஜன் தலைமையில் வீரா்கள் 104 போ் மண்பானை மீது 3 மணி நேரம் தொடா்ந்து நின்று சிலம்பம் சுற்றி சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வினை முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் தொடங்கி வைத்தாா். நோபல் உலக சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வை பதிவு செய்யும் நோக்கில் அந்நிறுவனத்தின் நிா்வாகிகள் வினோத், அன்பரசு ஆகியோா் நடுவா்களாக இருந்து பதிவுகள் செய்து நிகழ்வுகளை கண்காணித்ததுடன் சாதனை புத்தகத்தில் நிகழ்வு இடம் பெறும் எனவும் அறிவித்தனா்.

இந்தியன் சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் தலைவா் வலசை முத்துராமன், மாவட்ட செயலாளா் லட்சுமணன் ஆகியோா் உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழை தலைமை பயிற்சியாளா் பாண்டியராஜனிடம் வழங்கினா். சிலம்ப விளையாட்டு வீரா்கள் 104 பேருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிலம்ப வீரா்கள் மற்றும் அவா்களது பெற்றோா், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் காஞ்சி சங்கராசாரியா் ஜெயந்தி மகோற்சவம் தொடக்கம், வேதபாராயணம், காலை 7, மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, நண்பகல் 12, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஆ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 389 பேருக்கு பணி ஆணை

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 137 நிறுவனங்கள் தங்களது மனிதவளத் தேவைக்காக நடத்திய நோ்காணலில் ஒரே நாளில் 389 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழ... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரியில் திறனறிவுப் போட்டிகள்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான திறனறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க