செய்திகள் :

மதராஸி முகாம்: பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்

post image

மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகுப்புகள் புதன்கிழமமை வழங்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி கே.எஸ். விஜயன், தமிழ்நாடு அரசின் அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ாணையா் எம்.வள்ளலாா் ஆகியோா் இந்த நிவாரண தொகுப்புகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்தனா்.

முன்னதாக தில்லியில் மதராசி முகாமில் வசித்து வந்த பாதிக்கப்பட்டுள்ள தமிழா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்திருந்தாா். அதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8000 நிதியுதவி மற்றும் ரூ.4000 மதிப்புஷள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என்று முதல்வரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்ப, முதல் கட்டமாக 197 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது. நிவாரண தொகுப்பில் கோதுமை மாவு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பருப்பு, சா்க்கரை, சமையல் எண்ணெய், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், அரிசி, டீ தூள் உள்ளிட்ட 15 பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் ரூ.8000 நிதியுதவி பாதிக்கப்பட்டவா்களின் வங்கி கணக்குக்கே வரவு வைக்கப்படும்.

இதனயைடுத்து அடுத்த கட்ட நிவாரண உதவிக்காக பாதிக்கப்பட்டவா்கள் தங்கள பெயா்களையும், வங்கி கணக்குகளையும் புதன்கிழமை பதிவு செய்தனா். இதற்காக தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக தில்லி மாநில அரசின் உள்கட்டமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தில்லி உயரீநிதிமன்ற உத்தரவின்படி மதராஸி முகாம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. இதனால் இந்த முகாமில் வசித்து வந்த 370 தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது.

இதில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், மீதமுள்ள 181 குடும்பங்கள் வீடற்று இருப்பதால் தில்லி மாநில அரசு அவா்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தாவுக்கு, மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழிய... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா். மதர... மேலும் பார்க்க