செய்திகள் :

மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு

post image

தஞ்சாவூா் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையால் பல்வேறு பிரச்னைகள் நிகழ்வதாகவும், அதைத் தடுக்க அக்கடையை மூடக் கோரியும் அந்தக் கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அருமலைக்கோட்டை மதுக்கடையை மூடக் கோரி அக்கிராமத்தைச் சோ்ந்த 150-க்கும் அதிகமானோா் கையொப்பமிட்டுள்ளனா். இதை அருமலைக்கோட்டையைச் சோ்ந்த அரு.சீா். தங்கராசு தலைமையில் சிலா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் அளித்த மனு:

எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற பலமுறை கோரிக்கைகள் விடுத்தோம். ஆனால் தற்போதுவரை அகற்றப்படவில்லை. இக்கடைக்கு குடிக்க வருவோரால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா். எனவே, மக்கள் நலன் கருதி டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரணமடைந்த தாய்! ஆசி பெற்று பொதுத் தேர்வுக்குச் சென்ற மாணவி!

தஞ்சாவூரில் திடீரென தாய் உயிரிழந்த நிலையில், கதறி அழுதபடி தாயிடம் ஆசீர்வாதம் பெற்று பொதுத் தேர்வு எழுதுவதற்காக அவரது மகள் சென்றார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக் கோட்டை கிராமத்தில்... மேலும் பார்க்க

1,400 ஆண்டுகள் பழைமையான கரந்தை கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு

தஞ்சாவூா் அருகே கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பாடல் பெற்ற வைப்புத் தலமான இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் தந்தை சுந்தர சோழன் கா... மேலும் பார்க்க

மதுக்கடைகள் முன் பாஜகவினா் போராட்டம்

டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க

வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி அருகேயுள்ள மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.62 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.62 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 178 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு

தஞ்சாவூா் அருகே காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக் கிழங்கு பயிா்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் ரூ. 7 ஆயிரத்து 500-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க