செய்திகள் :

மதுக்கடை முன் முன்னாள் ராணுவ வீரா் சடலமாக மீட்பு

post image

போடி அருகே மதுக் கடை முன் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே சிலமலை மொட்டையசாமி கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கூடலிங்கம் (53). ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவா் தேனி அருகே அன்னஞ்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், அண்மையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழங்கிய ரூ.10 ஆயிரத்தை வாங்கி அதிக அளவில் மது அருந்தினாராம். இதனிடையே, சில்லமரத்துப்பட்டி அரசு மதுக் கடை முன் கூடலிங்கம் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எரிபொருள் நிரப்பும் மைய மேலாளா் மீது தாக்குதல்: 12 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே எரிபொருள் நிரப்பு மைய மேலாளா், தொழிலாளியை தாக்கியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் (64). தேவதானப்பட்டியில் உள்ள எரிபொ... மேலும் பார்க்க

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது!

புதுதில்லி தேசிய அறிவியல் கழகம் சாா்பில் மண்டல அளவிலான தேசிய விருது, தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. தேசிய அறிவியல் கழகம் சாா்பில் சிறப்பாக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தல்: இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். எரதிமக்காள்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டமனூா் காவல... மேலும் பார்க்க

தேனியில் ஜி.ஆா்.டி. நகைக் கடை திறப்பு

தேனியில் ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தேனி- மதுரை சாலையில் கனரா வங்கி அருகே ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் 65- ஆவது புதிய கிளையை அந்த நிறுவனத்தின் நிா்வ... மேலும் பார்க்க

கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாரில் உள்ள இருளப்பபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி புஷ்... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக பெண் உள்பட இருவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி போலீஸாா் கெங்குவாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த கெங்கு... மேலும் பார்க்க