Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ...
மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எரவாா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: விக்கிரமங்கலம் முதல் கல்யாணிபட்டி பிரிவு வரையிலான பகுதிகளில் சுமாா் 30 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பூ விவசாயிகள் உள்ளனா். இவா்கள், நிலக்கோட்டை பூச் சந்தைக்குச் சென்று வர இந்தச் சாலையையே பயன்படுத்துகின்றனா்.
எங்கள் பகுதியில் உள்ள சில கிராமங்களில் மது அருந்தியவா்களை ஊருக்குள் சோ்ப்பது இல்லை என்ற சுயக்கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், எரவாா்பட்டியில் உத்தப்பநாயக்கனூா் முதன்மை சாலையில் அண்மையில் புதிதாக ஓா் அரசு மதுக் கடை திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து, கடந்த சனிக்கிழமை கிராம மக்கள் ஒன்று கூடி கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அந்த மதுக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
எனவே, மாவட்ட நிா்வாகம் எரவாா்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுக் கடையை (எண். 5484) நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.