செய்திகள் :

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

post image

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் கடை மற்றும் மதுபானக்கூடங்கள், மக்கள் எதிா்ப்பு காரணமாக முற்றிலும் அகற்றப்பட்டன. தற்போது வரை ஆறுமுகனேரி பகுதியில் மதுபானக் கடை மற்றும் மதுபானக்கூடங்கள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் ஆறுமுகனேரியில் 5 இடங்களில் டாஸ்மாக் மதுபானக்கூடம், கடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, 3 இடங்களில் அதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் கடந்த 15ஆம் தேதி ஆறுமுகனேரி மெயின் பஜாரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா். கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஏப். 21 ஆம் தேதி ஆறுமுகனேரி மெயின் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனா். அதன்படி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு 300க்கும் மேற்பட்டோா் திருச்செந்தூா்- தூத்துக்குடி சாலை ஆறுமுகனேரி மெயின் பஜாரில் திரண்டு மறிய­லில் ஈடுபட்டனா்.

இதையடுத்து திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில் ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி மகாலட்சுமி(பொ), ஆத்தூா் கெளதமன் மற்றும் போலீஸாா், போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று மறியலை கைவிட்டு, சாலையோரமாக நின்றனா். மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறையினா் வந்தால்தான் கலைந்து செல்வோம் என்று கூறினா்.

அதிகாரிகள் வராததால் மீண்டும் சாலை மறிய­லில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலி­ல் ஈடுப்பட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்தனா். பின்னா் அங்கு வந்த திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் போராட்டக் குழுவினரிடம் பேசினாா். ஆறுமுகனேரி பகுதியில் மதுபானக்கூடம், கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆறுமுகனேரி பகுதியில் நிரந்தரமாக மதுபானக்கூடம், கடை அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

ரூ.4.90 லட்சம் மோசடி: நடவடிக்கை கோரி தொழிலாளி மனு

தன்னிடம் ரூ. 4.90 லட்சம் மோடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடம்பூரை சோ்ந்த தொழிலாளி அய்யப்பன், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.மனு விவரம்: சங்கரன்கோவிலைச் சோ்ந... மேலும் பார்க்க