செய்திகள் :

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி பலி

post image

அவிநாசி: அவிநாசி அருகே மது போதையில் இளைஞர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரை காப்பாற்ற சென்ற இளைஞரும் கிணற்று நீரிழ் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தை சேர்ந்த ராஜீவ் மகன் நவீன்குமார் (38). இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்று விட்டு வாடகை காரில் சுண்டக்காம்பாளையம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது காருக்கு வாடகை தர தனது தாயிடம் பணம் கேட்டு மதுபோதையில் தகராறு செய்துள்ளார். மேலும் தகராறின் போது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மது போதையில் இருந்த நவீன்குமார், வீட்டின் அருகே நீருள்ள கிணற்றில் குதிக்கச் சென்றுள்ளார். உடனடியாக நவீன் குமாரின் தாய் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைசாமி மகன் பிரவீன் ராஜ்(36) என்பவரை பார்க்க அனுப்பி வைத்துள்ளார். அப்போது கிணற்றில் குதிக்க முயன்ற நவீன் குமாரை காப்பாற்றுவதற்காக பிரவீன்ராஜ் கட்டிப்பிடித்துள்ளார். இருப்பினும், காப்பாற்ற முடியாமல் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவலறிந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை கிணற்றுக்குள் இருந்து இருவரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

A young man committed suicide by jumping into a well near Avinashi while under the influence of alcohol. The young man who went to save him also drowned in the well water.

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட நாடு வலிமை பெரும். பலவீனமான மாநிலங்களால் நாட்டை உயர்த்த முடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது அக்கறைக் கொண்ட அனைவரும் மாநில சுயாட்சிக்... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

திருநெல்வேலி: தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான் என திட்டவட்டமாகத் தெரிவித்த தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, "விவசாயத்தில் ஒரு பயிரை வேரோடு பிடுங்கி நட்டால், அது முன்பை விட பெரி... மேலும் பார்க்க

இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பில் சேருவது எப்படி?

10+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாக, இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பு... மேலும் பார்க்க

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளிய... மேலும் பார்க்க

மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?

மோடியின் அமைச்சரவையில்39சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம்130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. ஆ.ராசா, அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.75,520-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், அதனைத் தொடர்ந்து சில நாள... மேலும் பார்க்க