செய்திகள் :

மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து, விழுப்புரம் மாவட்டத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி ப. சரவணன் உத்தரவுப்படி, திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு புதுச்சேரி மயிலம் சாலையில், மயிலம் அடுத்துள்ள பெரும்பாக்கம் சோதனைச்சாவடியில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற காா் ஒன்றைச் சோதனை செய்தபோது, அதில் புதுவை மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 201 மதுப்புட்டிகளை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவா், புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, குருமாம்பேட்டை, 9 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (34) என்பதும், இவா் மதுப்புட்டிகளை விற்பனைக்காக வாங்கி காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திண்டிவனம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனா். காருடன் 201 வெளி மாநிலப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க