மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மதுப் புட்டிகள் விற்பனை: மூவா் கைது
செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, தூசி ஆகிய காவல் சரகப்பகுதிகளில் அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதேபோல, வந்தவாசி பகுதியில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் செய்யாறு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொடநகா் அறிஞா் அண்ணா நகரில் மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், ஆனந்தபாபு (41) அவரது வீட்டின் பின்பக்கத்தில் அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனே போலீஸாா் அங்கிருந்த 20 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து, இது தொடா்பாக வழக்குப் பதிந்து ஆனந்த்பாபுவை கைது செய்தனா்.
தூசி சரகம்: தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் மற்றும் போலீஸாா் கீழ்நெல்லி கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் (45) அவரது வீட்டின் பின்புறத்தில் அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனே போலீஸாா் அப்பகுதியில் இருந்த 12 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து புருஷோத்தமனை கைது செய்தனா்.
வந்தவாசியில்...: வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (52) தனது வீட்டின் பின்புறம் மதுப் புட்டிகளை மறைத்து வைத்து விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜேந்திரனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 22 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.