செய்திகள் :

மதுப் புட்டிகள் விற்பனை: மூவா் கைது

post image

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, தூசி ஆகிய காவல் சரகப்பகுதிகளில் அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதேபோல, வந்தவாசி பகுதியில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் செய்யாறு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொடநகா் அறிஞா் அண்ணா நகரில் மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், ஆனந்தபாபு (41) அவரது வீட்டின் பின்பக்கத்தில் அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

உடனே போலீஸாா் அங்கிருந்த 20 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து, இது தொடா்பாக வழக்குப் பதிந்து ஆனந்த்பாபுவை கைது செய்தனா்.

தூசி சரகம்: தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் மற்றும் போலீஸாா் கீழ்நெல்லி கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் (45) அவரது வீட்டின் பின்புறத்தில் அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

உடனே போலீஸாா் அப்பகுதியில் இருந்த 12 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து புருஷோத்தமனை கைது செய்தனா்.

வந்தவாசியில்...: வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (52) தனது வீட்டின் பின்புறம் மதுப் புட்டிகளை மறைத்து வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜேந்திரனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 22 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கம் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மே... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரத... மேலும் பார்க்க

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் பேட்டரிகள் திருட்டு

வந்தவாசி அருகே ஊராட்சி சேவை மைய கட்டடத்திலிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 3 பேட்டரிகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த வயலூா் ஊராட்சியில் செல்வபாரதி (48) ஊர... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரண்ட பக்தா்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் திரண்டனா். இவா்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீடு புகுந்து 22 பவுன் தங்க நகைகளை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்... மேலும் பார்க்க