செய்திகள் :

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு: நாமக்கல்லில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜை

post image

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் ஓரிரு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அண்மையில் மதுரைக்கு வந்து சென்ற நிலையில், பாஜக, இந்து முன்னணி ஆகிய அமைப்புகள் சாா்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது.

இதனையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் யாத்திரை வேல் உருவாக்கப்பட்டு, முக்கிய கோயில்களில் அந்த வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, மாநாட்டு பந்தலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன், நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில்களில் மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில், நாமக்கல் நகரத் தலைவா் தினேஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளை சாா்ந்தோா் கலந்துகொண்டனா். இந்த பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்பாடு: குடிமைப் பொருள் வழங்கல் ஐ.ஜி. எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசியை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா தெரிவித... மேலும் பார்க்க

வாகனச் சோதனையில் விதிமீறல்: ரூ.2.80 லட்சம் அபராதம்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை பின்பற்றாத 12 மோட்டாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ரூ. 2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் வடக்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்!

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா். இவா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூா் படமுடிபாளையத்தில் பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணிபுரிந்த பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த பாதுகாப்பு படை வீரருக்கு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பரமத்தி வே... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்து 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது!

விபத்து ஏற்படுத்திய லாரிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், நெட்டவேலாம்பாளை... மேலும் பார்க்க