செய்திகள் :

மதுரையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 2 விமானங்கள்!

post image

கனமழையால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் வட்டமடித்து வருகின்றன.

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன. மழையின் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாகவும், காற்று சுழற்சியின் நகர்வு காரணமாகவும் தமிழகத்தில் இடியுடன், கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க: தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

இதனால், மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தேனி அருகே ஒரு விமானமும், திருமங்கலம் அருகே ஒரு விமானமும் வட்டமடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக். 11 ஆம் தேதி திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் 3 நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து, எரிபொருள் குறைந்த பிறகு விமானம் தரையிறக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

அடையார் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணி காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை மெட்... மேலும் பார்க்க

மர்மதேசம் சீரியல் இயக்குநரின் புதிய இணையத் தொடர்!

சாய் தன்ஷிகா நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற இணையத் தொடர் நாளை (அக். 25) ஓடிடியில் வெளியாகிறது. திகில் மற்றும் மாயாஜாலத் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்தவகையில், 90க... மேலும் பார்க்க

வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம்!

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கான முகாம் குறித்த அறிவிப்பை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ளார்.சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக தேசிய மற்றும் மாநில அரசிய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: பெரியார், காமராஜர் கட்-அவுட்!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு திடல் முன்பு காமராஜர், பெரியார், நடிகர் விஜய் மற்றும் அம்பேத்கர் முழு உருவ 70 அடி உயர பிரம்மாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி... மேலும் பார்க்க

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினார்.தமிழ்நாடு ... மேலும் பார்க்க