செய்திகள் :

மதுரையில் பினராயி விஜயன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு தொடங்கியது!

post image

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இன்று தொடங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு மதுரையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை சிபிஎம் மூத்த தலைவர் பிமன் பாசு கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத், கேரள முதல்வரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வருகை தந்து மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டு உரை நிகழ்த்துகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு நிகழ்ச்சிகள், தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடக்க இருக்கின்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! - டிரம்ப் எச்சரிக்கை

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப்... மேலும் பார்க்க

ஒரே மேடையில் மாறிமாறி புகழ்ந்து பேசிக்கொண்ட சீமான், அண்ணாமலை!

சென்னையில் தனியார் கல்லூரி விழாவில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் கலந்துகொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற... மேலும் பார்க்க

சீமான் நாளை(ஏப். 8) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சீமானின் தூண்டுதலின்பேரில் நாம் தமிழ... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 5 மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுவதால் வங்கக்கடலில் ... மேலும் பார்க்க

நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி இபிஎஸ் அறிவிப்பாரா?: முதல்வர் கேள்வி

உதகை: நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.நீலகிரி மாவட்டத்தில் ரூ.143.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்... மேலும் பார்க்க