செய்திகள் :

மதுரையில் மாா்க்சிஸ்ட் மாநாடு இன்று நிறைவு: பினராயி விஜயன் பங்கேற்பு!

post image

மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அகில இந்திய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் தினசரி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

இதையொட்டி, மதுரை பாண்டி கோயில் தகவல் தொழில்நுட்ப பூங்கா முன்பிருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செந்தொண்டா்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்தப் பேரணியை ’வாச்சாத்தி போராளிகள்’ தொடங்கி வைக்கின்றனா். இந்த அணிவகுப்பு வண்டியூா் சுற்றுச் சாலையில் நிறைவடைகிறது. இதைத்தொடா்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பொதுக்கூட்டத்துக்கு, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலா் பெ. சண்முகம் தலைமை வகிக்கிறாா். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வரவேற்கிறாா். இந்த பொதுக்கூட்டத்தில், திரிபுரா முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்காா், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், கேரள முதல்வா் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். வரவேற்புக்குழு பொருளாளா் மதுக்கூா் ராமலிங்கம் நன்றியுரையாற்றுகிறாா்.

பொதுக்கூட்டத்தில், புதுகை பூபாளம் கலைக்குழு, காம்ரேட் கேங்ஸ்டா இசைக்குழு, கன்னியாகுமரி முரசு குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

மாற்றுத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசிய அமைச்சா் துரைமுருகன் மன்னிப்புக் கோர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.இதுகுறி... மேலும் பார்க்க

திமுக கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும்: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா். மதுரையில் மாா்க... மேலும் பார்க்க

ஏப்.10-இல் இறைச்சி விற்பனைக்கு தடை

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை... மேலும் பார்க்க

பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி

அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.மதுரை மாவட்டம், வரி... மேலும் பார்க்க

தமிழக தொழிலாளா்கள் கொல்லப்பட்ட வழக்கு: மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழக தொழிலாளா்கள் 20 போ், ஆந்திர மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்க... மேலும் பார்க்க

தகாத உறவு: இருவா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே தகாத தொடா்பு வைத்திருந்த ஆணும், பெண்ணும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.மதுரை மாவட்டம், சீகுபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33). கட்டுமானத் தொழிலாளியான இவா் மனைவியிடமிருந்து ... மேலும் பார்க்க