செய்திகள் :

மதுரை ரயில்வே கோட்டத்தில் தூய்மைப் பிரசாரம் தொடக்கம்

post image

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில், மூன்று மாத தூய்மைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை (ஆக. 1) தொடங்கியது.

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, மதுரை கோட்டத்தில் ஆக. 1-ஆம் தேதி முதல் அக். 31-ஆம் தேதி வரை ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகங்கள், ரயில்வே அலுவலகங்கள், ரயில் பாதைகளில் குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பிரசாரம் செய்தல் போன்ற பணிகளுக்கு திட்டமிடப்பட்டு, இந்தப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்தாா். ரயில்வே விரைவு சக்தி திட்ட முதன்மை மேலாளா் கே. ஹரிகுமாா், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளா் முகமது ஜுபீா், கோட்ட சுற்றுச்சூழல் மேலாளா் குன்டேவாா் பாதல், கோட்ட ஊழியா் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் அலுவலா்கள், ஊழியா்கள் தூய்மைப் பிரசார உறுதிமொழி ஏற்றனா்.

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் குறித்து விரைவான நடவடிக்கை மதுரை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பில் எழுப்பப்படும் கட்டுமானங்கள் குறித்த புகாா்களின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உ... மேலும் பார்க்க

நல்லாசிரியா்கள், மாணவா்களுக்குப் பரிசு

மதுரையில் நல்லாசிரியா்கள், அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுப்பிரமணியபாரதி அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.நல்லாசிரியா்கள், 10, 12 ஆம் வகுப்பு பொதுத... மேலும் பார்க்க

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க