செய்திகள் :

மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசமா? பாஜகவிடம் அதிஷி கேள்வி!

post image

உத்தரப் பிரதேசத்தில் பல மதுபானக் கடைகளில் ’மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசம்' என்று அறிவித்தது பற்றி பாஜகவிடம் ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதற்கான காரணம் என்னவென்றால், அங்குள்ள பல மதுபானக் கடைகளில் ’1 வாங்கினால் 1 இலவசம்’ என்ற சலுகை தரப்பட்டுள்ளது.

இதுபற்றி தில்லி எதிர்க் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிஷி இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

அப்போது, ”பாஜக ஆளும் உ.பி.யில் உள்ள பல மதுபானக் கடைகளில் கூட்டநெரிசல் ஏற்படும் அளவு மக்கள் கூடும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஏனென்றால், யோகி ஆதித்யநாத் அரசு ’மதுபாட்டில் 1 வாங்கினால், 1 இலவசம்’ என்று சலுகை வழங்கியுள்ளது. அண்டை மாநில மக்களும் அங்கு சென்று நெரிசலில் சிக்கிய விடியோக்கள் வெளிவந்துள்ளன.

பாஜக அரசு உ.பி. மட்டுமின்றி அண்டை மாநில மக்களையும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக மாற்ற நினைக்கிறதா? யோகி ஆதித்யநாத் மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா?

இது உங்களின் அனுமதியின்றி நடைபெற்றால் இந்த அவலத்தை எதிர்த்து பாஜக தெருவில் இறங்கி போராடுமா?

1 வாங்கினால் 1 இலவசம் என்பதை பாஜக அரசு ஊழல் என்று குறிப்பிடும். அப்படியென்றால் இந்த விவகாரத்தில் யோகியின் அலுவலகத்தில் சிபிஐ, ஈடி போன்ற அமைப்புகள் எப்போது சோதனை நடத்தும்? ” என அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | யுபிஐ சேவை பாதிப்பு! ஜி பே, போன் பே செயல்படுகிறதா?

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 ... மேலும் பார்க்க

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க