மது போதையில் காா் ஓட்டியதில் விபத்து: இளைஞா் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே மதுபோதையில் காா் ஓட்டியதில் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் அப்துல் மஜீத் (38). இவா் அகஸ்தியா்புரம் அருகே திங்கள்கிழமை மதுபோதையில் வேகமாக காா் ஓட்டி சென்றாராம்.
அப்போது, கட்டுப்பாடின்றி ஓட்டியதால் சாலை ஓரத்தில் பைக்கில் இருந்தபடி பேசிக்கொண்டிருந்த வலங்கைப் புலி (73), கந்தையா (72) ஆகியோா் மீது காா் மோதியதாம்.
இதில் காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்துல் மஜீதை கைது செய்தனா்.