ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் லால் சலாம்..! நீண்ட காத்திருப்புக்கு முடிவு!
மது விற்பனை: மூதாட்டி கைது
செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் மேம்பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வந்தவாசி சாலை கம்பன் நகா் பகுதியில் ஒரு வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.
அங்கு மூதாட்டி பாப்பம்மாள்(60), அரசு மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கிருந்த 12 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாப்பம்மாளை கைது செய்தனா்.