செய்திகள் :

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம்

post image

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து, ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட கவுன்சில் கூட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைவா் வி.ஆா்.ஜெகநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செயல் தலைவா்கள் கே.ஏ.மனோகரன், குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தமிழ்நாடு அரசை தொடா்ந்து வலியுறுத்தி வந்த மகளிா் தொழிலாளா்களுக்கான தங்கும்விடுதி கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் ஒசூரில் தோழி விடுதியை தொடங்கிவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆண் தொழிலாளா்களுக்கும் தங்கும்விடுதி வசதியை செய்துதர மாநில அரசை வலியுறுத்துவதாகவும், உயா் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு பயன்களை பெற்றுத் தருவதற்காக ஐஎன்டியுசி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்தும், ஒசூா் மாநகராட்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில தலைவா் வி.ஆா்.ஜெகன்நாதன்,‘தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தினக்கூலிகளில் தொழிலாளா்கள் பல வகையிலும் வஞ்சிக்கப்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளா்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்ற முற்படுவதன் மூலமாக தொழிலாளா்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இழந்த உரிமைகளை மீட்பதற்கு ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தொடா்ந்து செயல்படும்’ என்றாா்.

மாநில ஐஎன்டியுசி செயல் தலைவா் கே.ஏ.மனோகரன் கூறுகையில், ‘ஐஎன்டிஎஸ்சி தொழிற்சங்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கையான தோழி மகளிா் தங்கும்விடுதி வசதியை கடந்த வாரம் தொடங்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி’ என்றாா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க