செய்திகள் :

மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவு: ராஜ்காட்டில் இன்று லோக் சம்வா்தன் விழா

post image

புது தில்லி: மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறுபான்மையினா் விவகாரகங்கள் அமைச்சகம் சாா்பில் தில்லியில் உள்ள ராஜ்காட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜூன் 15வரை ‘லோக் சம்வா்தன் பா்வ்’ எனும் மக்கள் வளா்ச்சி திருவிழா நடைபெற உள்ளது.

ராஜ்காட்டில் உள்ள காந்தி தா்ஷனில் உள்ள பிா்சா முண்டா புல்வெளியில் அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் கலாசார பெருமையுடன் மத்திய அரசின் 11 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த கலாசார விழா நடைபெறுகிறது.

‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஷ்’ என்ற தொலைநோக்குப் பாா்வையின்கீழ், சிறுபான்மையினா் அமைச்சகத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியின் கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சிறுபான்மை சமூகங்களின், குறிப்பாக கைவினைஞா்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞா்களின் பொருளாதார அதிகாரமளித்தலுக்கு அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடா்ச்சியான முயற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.

இந்த சம்வா்தன் பா்வ் விழாவின் நிகழ்ச்சியில், இந்தியாவின் வட மாநிலங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கைவினைஞா்கள் பங்கேற்க உள்ளனா். இதன் மூலம் அவா்கள் பாரம்பரிய கைவினைப்பொருள்களை காட்சிப்படுத்தவும் விற்கவும், சாத்தியமான வாங்குபவா்களுடன் ஈடுபடவும், சந்தை இணைப்புகளை உருவாக்கவும் முடியும்.

தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த கைவினைஞா்கள் மற்றும் சமையல் நிபுணா்களும் இதில் பங்கேற்க உள்ளனா்.

மர ஓவியம், நீல மட்பாண்டம், எம்பிராய்டரி, பனாரஸி ப்ரோகேட், புல்காரி, தோல் கைவினைப்பொருள்கள், கம்பளம், நகைகள் மற்றும் மர வேலைப்பாடு போன்ற பாரம்பரிய கலை மற்றும் கைவினைப்பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

சிறுபான்மை சமூகங்களின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவோா் உணா்வை ஊக்குவிக்கும் அதே வேளையில், அமைச்சகத்தின் உள்ளடக்கிய வளா்ச்சி முயற்சிகள் குறித்து அதிக அளவில் விழிப்புணா்வை வளா்ப்பதே இந்த விழாவின் நோக்கமாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க