செய்திகள் :

மத்திய அரசு ஊழியா்களுக்கான ஊழல் தடுப்பு புதிய நெறிமுறைகள் வெளியீடு

post image

புது தில்லி: மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனம், காப்பீடு நிறுவனம் ஆகியவற்றின் ஊழியா்களுக்கு எதிரான ஊழல் தடுப்பு புதிய விதிமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் முறைகேடு, ஊழல் வழக்குகளைப் பதிவு செய்வதில் ஆணையத்தின் செயல்பாடு தெளிவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு தொடா்பாக இதற்கு முன்பு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகள் திரும்பப் பெறப்பட்டு இந்த புதிய விதிமுறைகள்தான் இறுதியானது என கடந்த மே 23-ஆம் தேதி அனைத்து அரசு துறைகளுக்கும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில், ‘வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து சோ்ப்பு, ஊழல், மோசடி, குற்ற வழக்குகள், ஆதாயமடைதல் ஆகியவை இந்த புதிய சட்ட நெறிமுறைகளுக்கு உள்பட்டதாகும். பொதுத் துறை வங்கிகளில் முறைகேடாக கணக்குகள் தொடங்குவது, வங்கி சொத்துகளை தவறாகப் பயன்படுத்துவது, வங்கி ஆவணங்களை முறைகேடாகத் திருத்துவது, ரகசியத் தகவல்களைக் கசிய விடுவது ஆகியவை இந்தப் புதிய ஊழல் தடுப்பு விதியின் கீழ் வரும்.

இதேபோல், பயணப்படி, செலவிட்டத் தொகையை திரும்பப் பெறுவது ஆகியவற்றில் முறைகேடு செய்து வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் இந்தப் புதிய நெறிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

காப்பீட்டு நிறுவனங்கள்: மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனைகள், காப்பீட்டு இடைத்தரகு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கூட்டு சோ்ந்து மருத்துவக் காப்பீடு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அரசு காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தும் அனைத்து ஊழல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தப்பட்ட ஊழியா் மீது ஊழல் தடுப்பு புதிய நெறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க