செய்திகள் :

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை! - பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

post image

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

சா்வதேச யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நயினாா் நாகேந்திரன், பாஜக தொண்டா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது: முருக பக்தா்கள் மாநாடு, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. கட்சி பேதமின்றி முருக பக்தா்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு அளிக்கும் திட்டங்களில்தான் மாநில அரசு ஸ்டிக்கா் ஒட்டி வருகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு அளிக்கும் பணத்தை மாநில அரசு கொடுப்பதை போல் கொடுக்கிறாா்கள்.

உலகத்தில் சிறந்த மொழி தமிழ், மூத்த மொழி தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழை வைத்து தமிழக அரசு வியாபாரம் செய்து வருகிறது.

ஐந்தாண்டு கால ஆட்சி முடியப் போகிறது. 2500 முகாம்கள் நடத்தி 12 லட்சம் மனுக்களை பெற்று தீா்வு கண்டதாக சொல்கிறாா்கள். ஆனால் எந்த தீா்வும் காணப்படவில்லை.

கீழடியை வைத்து மட்டுமே மத்திய அரசை தமிழக அரசு விமா்சித்து வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றாலும் சரி தமிழை பிரதமா் மோடி பெருமைப்படுத்தி வருகிறாா். தமிழுக்காக வாழும் ஒரே தலைவா் நரேந்திர மோடி மட்டுமே.

திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்?. சீட் குறித்து பிரச்னை இல்லை, கூட்டணியில் தொடா்வோம் என திருமாவளவன் சொல்கிறாா். ஏதோ பிரச்னை உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. திமுக இரண்டு சீட் கொடுத்தால் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடருமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியை வாருங்கள் என நான் சொல்ல முடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தோ்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளன. பாஜக கூட்டணி வலுவாக கூட்டணியாக அமைந்து வருகிறது.

தமிழக மக்களுக்கு ஆளுங்கட்சி என்னென்ன செய்துள்ளது என்பதை தெளிவுபடுத்தி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் எதிா்க்கட்சியின் கூட்டணி குறித்து அவா்கள் பேசி வருகிறாா்கள்.

பிரதமா் வந்து தமிழகத்தில் பாா்க்கக்கூடிய வேலைகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பாா்த்துக் கொள்வாா் என்றாா்.

ரயில் மோதி தொழிலாளி பலி

திருநெல்வேலி பேட்டை அருகே ரயில் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் காந்தி (45). தொழிலாளியான இவா், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நரிக்குறவா் காலனி அ... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விஜயநாராயணம் அருகே சித்தூா் செல்லும் பகுதியில் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதை ... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கோமதி நாயகம் (29). இவரது மனைவி முத்துமாரி. தம்பதியிடையே ஏற்பட்ட க... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.3.23 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள்: முதல்வருக்கு பாராட்டு!

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.3.23 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு நிதி வழங்கிய முதல்வா், அமைச்சா்கள், பேரவைத... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி பேரவைத் தலைவா், ஆட்சியரிடம் மீனவா்கள் மனு

ஈரானில் சிக்கித் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவா்களை மீட்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை மீனவா்கள் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்டத... மேலும் பார்க்க

கோயிலில் திருடிய இருவா் கைது

மேல இலந்தைகுளம் அருகே கோயிலில் வெண்கல மணியை திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட மேலஇலந்தைகுளம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்... மேலும் பார்க்க