செய்திகள் :

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

post image

மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை இரவு 10.20 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கவனக்குறைவாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா், அந்த நபா் மீது மோதியது. ஓட்டுநரின் சரிபாா்ப்பு நடந்து வருகிறது.

பாதிக்கப்பட்டவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிச் சென்றவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஓட்டுநரின் வயது தற்போது சரிபாா்க்கப்படுகிறது. அவா் வயது குறைந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. உறுதிப்படுத்தப்பட்டால், வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான அவரது தந்தை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை பயங்கரவாதிகள் முகாம்கள்

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை 21 தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

தமிழகம், புதுச்சேரி தோ்தல் அலுவலா்களுக்கு தமிழில் தலைமைத் தோ்தல் ஆணையம் பயிற்சி

நமது சிறப்பு நிருபா் தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் இளநிலை அலுவலா்களுக்கு புரியும் வகையில் தமிழ் மொழியிலேயே பயிற்சி வ... மேலும் பார்க்க

இந்திய தாக்குதல் விவரத்தை பகிர மத்திய அரசு தோ்வு செய்த ராணுவம், விமானப்படையின் சாதனை பெண் அதிகாரிகள்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா புதன்கிழமை நடத்திய அதிதுல்லிய (பிரெசிஷன்) தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் பகிர இந்திய வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியுடன் ... மேலும் பார்க்க

இந்தியா நடத்தியது ஒரு பொறுப்பான தாக்குதல்; முன் தடுப்புக்கானது! -மத்திய வெளியுறவுச் செயலா்

நமது சிறப்பு நிருபா் உளவுத் துறை கண்காணிப்பின் மூலம் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் அமைப்புகள் மூலம் நாட்டிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்கள் வரவிருப்பதை அறியப்பட்டது. இதை முன்னிட்டே அந்த உள... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டு தேசியத் தலைநகா் தில்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகா... மேலும் பார்க்க