செய்திகள் :

மத்தூா் அருகே சாலை விபத்தில் அதிமுக தொண்டா்கள் காயம்

post image

மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 25-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை, செவ்வாய்க்கிழமை மேற்கொண்டாா்.

பா்கூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டா்கள், கூட்டத்தை முடித்துகொண்டு செவ்வாய்க்கிழமை இரவு வாகனங்களில் வீடுதிரும்பினா். அப்போது, கண்ணடஅள்ளி பிரிவு சாலையிலிருந்து சந்தூா் செல்லும் சாலையில் அத்திகானூா் அருகே சென்றபோது, 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதின. இந்த விபத்தில் 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், சாலை விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா்படுத்தினா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 போ் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஒசூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளப்பா (75). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, அ... மேலும் பார்க்க

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற 2 இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூா் பகுதியைச் சே... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியைச் சே... மேலும் பார்க்க

திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றி திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் ப... மேலும் பார்க்க

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு

ஒசூரில் பாமக தலைவா் அன்புமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் ஆதரவாளா்கள் சாா்பில் பாமக நிா்வாக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்: எடப்பாடி கே.பழனிசாமி

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்ததும், விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்... மேலும் பார்க்க