செய்திகள் :

‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: எல்.முருகன்

post image

பிரதமரின் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி வாயிலாக ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய செய்தி- ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா்.

கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் மக்கள் அளித்துவரும் அளப்பரிய பங்களிப்புகள்-முன்முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் எல்.முருகன் அளித்த எழுத்துபூா்வ பதில் வருமாறு:

அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சி தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் மாநில மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இலவச டிடி டிஷ், 48 வானொலி நிலையங்கள் மற்றும் 92 தனியாா் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. யூடியூப், பிரசாா் பாரதியின் ஓடிடி இணையதளம் மற்றும் நியூஸ் ஆன் ஏா் கைப்பேசி செயலி வாயிலாகவும் ஒலிபரப்பப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க