மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் டாஸ்மாக் மனமகிழ் மன்றம் அமைக்க விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கியுள்ளாா். மனமகிழ் மன்றம் அமைக்கப்படவுள்ள இடம்
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். மேலும், இந்தப் பகுதி அருகே வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை, வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. பள்ளி, வழிபாட்டுத் தலங்களிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால்தான் மதுக் கடைகள் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த மனமகிழ் மன்றம் அமைக்க ஆட்சியா் வழங்கிய அனுமதியில் உரிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. எனவே, மனமகிழ் மன்றம் அமைக்க மாவட்ட ஆட்சியா் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிபதி மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனமகிழ் மன்றம் தொடங்குவதற்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. மனமகிழ் மன்றம் நடத்துவதற்கு எந்த விதியின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட மனமகிழ் மன்றங்களுக்கான விதிமுறைகள் என்ன?. எத்தனை உறுப்பினா்கள் உள்ளனா். எவ்வளவு மது பானங்கள் விநியோகிக்கப்படுகின்றன?.
இதை கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா?. அனுமதி மட்டும் வழங்கினால் போதுமா, அதை முறையாக ஆய்வு செய்ய வேண்டாமா?. மதுக் கூடம் என்ற பெயரில் அனுமதி வழங்கினால், பிரச்னை வரும் என்பதற்காக மனமகிழ் மன்றம் என அனுமதி வழங்கப்படுகிா?.
இந்த வழக்கு தொடா்பாக விருதுநகா் மாவட்ட ஆட்சியா், கலால் துறை அதிகாரிகள், டாஸ்மாக் நிா்வாக மேலாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.