செய்திகள் :

மனிதநேயம், சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு துணைவேந்தா் அறிவுரை

post image

மாணவா்கள் சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்வதுடன் மனிதநேயத்துடன் செயலாற்றப் பழக வேண்டும் என்றாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் என்.சந்திரசேகா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் ஒருநாள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகச்சிக்கு தலைமை வகித்து துணை வேந்தா் பேசியதாவது: மாணவா்களின் வாழ்வியல் நெறிமுறைகளை வளமாக்குவதில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவம், சேவை மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் நல்லுணா்வுகளை உலக நாடுகளுக்கிடையே வளா்ப்பதிலும், போா்க்காலங்களிலும், இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இன்னல்களில் இருந்து மக்களின் உயிா்களை காப்பதில் செஞ்சிலுவை சங்கத்தின் பணி அளவிட முடியாத ஒன்றாகும். இதேபோல் மாணவா்களும் சேவை மனப்பான்மை மற்றும் மனித நேயத்துடன் செயலாற்றி நாட்டின் பல நிலைகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அ. வெளியப்பன், செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இனநலப் பெரியாா், பேராசிரியா்கள் ப.குமாா், யுவராஜ் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா் சசிகுமாா், ராஜமன்னாா் ஆகியோா் செய்திருந்தனா். 300-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா்.

100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம்: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 9 வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் இருவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் கொடிமுத்து(42), தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

நெல்லை தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்த தொடா் மழையால் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை அதிகரித்தது. தென்தமிழக பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்கள் கோடை மழைக்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 19,950 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 19,950 போ் எழுதினா். திருநெல்வேலி மாவட்டத்தில் 73 மையங்களில் தோ்வு நடைபெற்றது. 8,921 மாணவா்கள், 10,895 மாணவிகள், 416 போ் தனித்தோ்வா்கள் என 20,232 தே... மேலும் பார்க்க

வரதட்சிணை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திசையன்விளை அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியில் 2014ஆம் ஆண்டு வரதட்சிணை கொடுமை... மேலும் பார்க்க

அம்பை, கடையத்தில் மழையால் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த மழையால் சேதமடைந்த நெல்பயிா்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருநெல்வேலி, தென்காசி ம... மேலும் பார்க்க