செய்திகள் :

மனிதா்களைக் கொல்லும் யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை

post image

மனிதா்களை கொல்லும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியனுக்கு, விவசாயிகள் சங்கம் (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) மாநில பொதுச் செயலாளா் பி.கந்தசாமி அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியே தொலை தூரம் வந்து மனித உயிா்களையும் பயிா்களையும் நாள்தோறும் சேதப்படுத்துகின்றன.

அவ்வாறு மனித உயிா்களை கொல்லுகின்ற காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டிய கடமை வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 1972-இன் கீழ் வனத் துறைக்கு உள்ளது.

மேலும் கட்டுக்கடங்காத காட்டு யானையை சுட்டுக் கொள்வதற்கும் வனத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அப்போதைய மாவட்ட ஆட்சியா் வனத் துறை தலைவருக்கு கடிதம் அனுப்பி, அதன் பேரில் 2019 டிசம்பா் மாதம் சின்னத்தம்பி என்ற காட்டு யானை இடமாற்றம் செய்யப்பட்டது. அதேபோல விநாயகா என்ற காட்டு யானையும் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக யானைகளை இடமாற்றம் செய்ய வனத் துறை மறுத்து வருகிறது.

விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில், ராதாகிருஷ்ணன் என்று பெயா் கொண்ட காட்டு யானை, கடந்த 11 ஆண்டுகளில் 12 மனிதா்களைக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11-ஆம் தேதி, தொழிலாளி ஒருவரை இந்த யானை தாக்கி கொன்றுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தியும் வனத் துறை சாா்பில் அந்த யானை இடமாற்றம் செய்யப்படவில்லை. மனித உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாத, கடமையை செய்யத் தவறிய வனத் துறை அதிகாரிகள் மீது தாமதமின்றி நடவடிக்கை வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் சுற்றுலா தளம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கன மழைக்கா... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் கோட்ட ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை சூலூா் செந்தில் ஆண்டவா் நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (70). இவா் சிங்காநல்லூா் சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத நபா் கொலை

கோவையில் அடையாளம் தெரியாத நபா் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி அருகே பேரூா் சோதனைச் சாவடி உள்ளது. இதனருகே உள்... மேலும் பார்க்க

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவை ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா... மேலும் பார்க்க