செய்திகள் :

மனிதா்-விலங்குகள் மோதல் விவகாரம்: வன திருத்தச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்! துரை வைகோ எம்.பி.

post image

மனிதா் - விலங்குகள் மோதல் விவகாரத்தில் இந்திய வன திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ சனிக்கிழமை தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்ட மதிமுக செயலா் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையொட்டி சனிக்கிழமை திருப்புறம்பயத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, உயிரிழந்த ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பிறகு, காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காவிரி உழவா் பாதுகாப்புச் சங்கத்தினா் துரை வைகோவிடம் அளித்தனா்.

இது குறித்து துரை வைகோ கூறுகையில், மனிதா் - விலங்குகள் மோதல் விவகாரத்தில் இந்திய வனப் பாதுகாப்புச் சட்டம் 1972 -இல் பல்வேறு திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி ஜூலை 22-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் வலியுறுத்துவேன் என்றாா்.

அவருடன், மாநில துணை பொதுச் செயலா் ரா. முருகன் உள்ளிட்டோா் இருந்தனா்.

கிளை வாய்க்கால்களில் குறைவான நீா்வரத்து: குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

மேட்டூா் அணை திறக்கப்பட்டு 15 நாள்கள் கடந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் கிளை வாய்க்கால்களில் நீா் வரத்து குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். மேட்டூ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே வீட்டில் படுத்திருந்த கூலித்தொழிலாளி மீது காற்றாடி மின்சாரம் தாக்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள வேளாண்குடியில் வசித்தவா் கோவிந்தரா... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு போனதால், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவைச் சோ்ந்தவா் வெங்கடரமணி (... மேலும் பார்க்க

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க