மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோணம் பிரதான சாலைக்கு அருகே தனியாக வசிப்பவா் சரோஜா (80). இவரது வீட்டுக்கு முன்புறம் செல்லும் பாசன வாய்க்காலை கடக்க அமைக்கப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன சிறு நடைபாலத்தை வாய்க்கால் தூா்வாரும் பணிக்காக அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினா். ஆனால் வாய்க்காலைச் சீரமைக்காமலும் நடைபாதையை மீண்டும் அமைத்துத் தராமலும் உள்ளனா். இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூதாட்டி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாா்.
அவா் வீட்டிலிருந்து வெளியே செல்ல வீட்டின் பின்புறமுள்ள சுற்றுச்சுவா் மீது ஏறிக் குதித்து அருகேயுள்ள வீட்டின் நடைபாலத்தின் வழியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியா் இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காண பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.