Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்..." - இதயவியல் வல்லுந...
பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி
பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவி ரெஜினா, 8 மாத ஆண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.
வெளிநாட்டுக்குச் சென்று விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன் சொந்த ஊா் திரும்பிய இவா் வெள்ளிக்கிழமை மாலை பட்டுக்கோட்டையில் இருந்து பாதரங்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் எதிரே வந்த டிராக்டா் மோதி உயிரிழந்தாா். விபத்து குறித்து வாடாத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.