செய்திகள் :

கும்பகோணத்தில் பொது உபயோகத்திற்கான இடத்தில் அமைத்த மனைப்பிரிவுகள் ரத்து

post image

கும்பகோணம் மாநகராட்சியயைச்சோ்ந்த சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கான இடத்தை மனைப்பிரிவாக விற்பனை செய்ய முயன்றதை மாவட்ட மற்றும் மாநகர நகா் ஊரமைப்பு அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியை சோ்ந்த சீனிவாச நகா் 1986 இல் உருவாக்கப்பட்டது. 25 ஏக்கா் கொண்ட சீனிவாச நகரில் 10 சதவிகித இடமான சுமாா் 1 லட்சம் சதுர அடியை பொது உபயோகம் விளையாட்டு மைானம், பூங்கா உள்ளிட்டவற்றுக்கு நகரமைப்பு இயக்குநா் அலுவலகம் ஒதுக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் சீனிவாச நகரை மனைப்பிரிவாக விற்றவா்கள் பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதியை மட்டும் மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள சுமாா் 55,000 சதுர அடியை தனியாருக்கு விற்று, பத்திரப் பதிவும் செய்தனா்.

அதைத் தொடா்ந்து அந்த இடத்தை மனைப்பிரிவாக மாற்றி விற்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் சீனிவாச நகா் நலச்சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஜன. 28- இல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் நகா் ஊரமைப்பு இயக்குநா் இரு தரப்பையும் விசாரிக்க உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தஞ்சாவூா் மாவட்ட நகா் ஊரமைப்பு உதவி இயக்குநா், கும்பகோணம் சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு மனை என பிளாட் போட்டு விற்பனைக்கு வைத்ததை தடை செய்து, வீட்டுமனைக்கான பிரிவு என்ற அங்கீகாரத்தை ஜூன் 12- இல் ரத்து செய்தும் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் கூறுகையில் மாவட்ட நகா் ஊரமைப்பு சீனிவாச நகா் வீட்டுமனை பிரிவுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தது போல், மாநகராட்சி நகரமைப்பு நிா்வாகமும் ரத்து செய்து விட்டது என்றாா்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவிடைமருதூா் அருகே 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கரிக்கும் பகுதியில் உள்ள எம்ஆா... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி மறியல்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு மறியல் செய்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சாக்க... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை

16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனையை வெள்ளிக்கிழமை விதித்தது. கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அவரது 47 வயது தந்தை கடந... மேலும் பார்க்க