Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் ...
பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை
16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனையை வெள்ளிக்கிழமை விதித்தது.
கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அவரது 47 வயது தந்தை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தந்தையை கடந்த 2020 ஆம் ஆண்டில் கைது செய்தனா்.
தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.