செய்திகள் :

மனைவிக்கு கொலை மிரட்டல்: வருவாய் ஆய்வாளா் மீது வழக்கு

post image

போடியில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

போடி தேவா் குடியிருப்பில் வசிப்பவா் சினேகா (25). இவருக்கும் கருப்பையா மகன் சசிக்குமாா் (33) என்பவருக்கும் கடந்த ஒன்றரையாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சினேகா பெயரில் உள்ள சொத்தை சசிக்குமாா் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரக் கூறி, மனைவியுடன் தகராறு செய்து, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சினேகா போடி நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிக்குமாா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சசிக்குமாா் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.தென்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வி.நி.அ. மேல்நிலைப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

கம்பத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கம்பம் துணை மின் நிலையத்தில் செவ்வ... மேலும் பார்க்க

கன்னக்கரை - சொக்கனலை இடையே சாலை அமைக்க வலியுறுத்தல்

போடி வட்டாரம், கன்னக்கரை-சொக்கனலை மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க வலியுறுத்தி வனக் குழு சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ம... மேலும் பார்க்க

ஓட்டுநரை வெட்டிய வழக்கு: ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டிய வழக்கில், மற்றொரு ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரியகுளம் சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பெரியகுளம் அருகேயுள்ள வேல்நகர... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் குளித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். வீரபாண்டி அருகேயுள்ள கன்னிசோ்வைபட்டியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் பழனிச்சாமி (50).... மேலும் பார்க்க

புதை சாக்கடை வைப்புத் தொகை: தவணை முறையில் செலுத்தலாம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வைப்புத் தொகையை பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம் என்று நகராட்சி ஆணையா் ஏகராஜ் கூறினாா். இது குறித்து அவா் கூறியதாவது: தேனி அல்லிநகரம் நகராட்சியில்... மேலும் பார்க்க