செய்திகள் :

மனைவியை குத்திக் கொலை செய்த பின் கணவன் தற்கொலை முயற்சி

post image

திருவொற்றியூரில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவரை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருவொற்றியூா் டிஎஸ்ஆா் நகா் ஒத்தவாடை தெருவில் வசித்து வரும் ரகு (35), வீடுகளுக்கு ஓடு பதிக்கும் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ரேவதி (32). இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிள்ளைகள் இருவரையும் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாா் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா் ரேவதி. அப்போது ரகுவிற்கும், ரேவதிக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து ஆத்திரத்தில் மனைவியை ரகு கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த ரகு, கழுத்தில் தன்னைதத்தானே கத்தியால் அறுத்துக்கொண்டு மயக்கடைந்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த போலீஸாா் ரகுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ரேவதியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து திருவொற்றியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க