செய்திகள் :

'மனைவியோடு தொடர்பிலிருந்த சகோதரர்; கொலை செய்ய வெளிநாட்டில் இருந்து வந்த கணவர்' - அதிர்ச்சி சம்பவம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். முருகேசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முருகேசன் மாலத்தீவில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில், முருகேசனின் சகோதரர் பாஸ்கரன் சாதி மறுப்புத் திருமணம் செய்த நிலையில் அவருக்கு 5 வயதில் ஒரு மகனும் உள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்ததை பாஸ்கரனின் பெற்றோர் ஏற்காததால் அவரது மனைவி அவரைப் பிரிந்து அவரது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.

திருமணம் மீறிய உறவு?

இதனால், தனது மகனுடன் பாஸ்கரன் தனது பெற்றோர் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார். அதே வீட்டில் கீழ் பகுதியில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்த முருகேசனின் மனைவி தான் பாஸ்கரனின் மகனையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பாஸ்கரனுக்கும், அவரது அண்ணிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில் இதுகுறித்து தெரிந்து பாஸ்கரனின் பெற்றோர் பாஸ்கரனை கண்டித்ததில், பாஸ்கரன் அவரது பெற்றோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கொலை... விபத்து நாடகம்!

இது தொடர்பாக, மூத்த மகன் முருகேசனுக்குத் தகவல் தெரிந்து, அவரது மனைவியிடம் விசாரித்த போது பாஸ்கரன் தான் தன்னை வலுக்கட்டாயமாக கொடுமைப்படுத்தி உறவில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முருகேசன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டுக்கு போக சொல்லியுள்ளார். இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த முருகேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாஸ்கரனை கொலை செய்திருக்கிறார்.

pudukkottai

அதோடு, தனது தாய் மற்றும் தந்தை உதவியோடு அவரது சடலத்தை தூக்கிச் சென்று அவரது வீட்டின் அருகே இருக்கக் கூடிய சாலையில் விபத்தில் முருகேசன் இறந்தது போல் ஏற்பாடு செட்டப் செய்துஅங்கேயே அவரது உடலை போட்டார். அதன்பிறகு, வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை எல்லாம் பெற்றோரை கழுவ சொல்லி விட்டு, மீண்டும் வெளியூருக்குச் சென்று விட்டு, தம்பியின் மரணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வருவது போல மறுநாள் இரவு வீடு திரும்பி உள்ளார்.

பாஸ்கரனின் இறப்பு குறித்து சந்தேக மரணம் என முதலில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் குடும்பத்தினரை விசாரித்ததில் உண்மைகள் தெரிய வந்தது. இதனால், பாஸ்கரனின் தந்தை வீரப்பன், தாய் வசந்தா, அண்ணன் முருகேசன் மற்றும் அண்ணி ஆகியோரை வடகாடு காவல் நிலைய போலீஸார் காது செய்தனர். மனைவியோடு திருமணம் மீறிய உறவில் இருந்த தனது சகோதரரை வெளிநாட்டில் இருந்து வந்து இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் காரணமான புகாரை அளித்த நிகிதா மீது கூறப்படும் மோசடி... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் காமாட்சி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.பணியை முடித்துக் கொண்டு நள்ளிரவ... மேலும் பார்க்க

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்... அதிர்ச்சி பின்னணி!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கை... மேலும் பார்க்க

விடுதி வளாகத்தில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி... சிவகங்கையில் சோகம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகள் பிருந்தா. இவர் காளையார்கோயில் அருகே ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் விடுதியில் தங்கி சகாயராணி பெண்கள் மேல்நிலைப... மேலும் பார்க்க

மும்பை: பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை; ஆசிரியைக் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

மும்பையில் உள்ள பிரபலமான ஆங்கில மீடிய பள்ளியில் 40 வயது ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதே பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனைக் கட்டாயப்படுத்தி நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்ற... மேலும் பார்க்க

அஜித்குமார் : `ஐஏஎஸ் உறவினரும் இல்லை; எந்த செல்வாக்கும் இல்லை; நாங்களே..!' - புகார் கொடுத்த நிகிதா

’’எங்கள் நகையைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தேன். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். இந்தப் பாவத்தை நாங்கள் எப்படி சுமப்போம் என்று நானும் அம்மாவும் ... மேலும் பார்க்க