செய்திகள் :

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்... அதிர்ச்சி பின்னணி!

post image

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கையெழுத்திட்டு பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் - அப் முகப்பு படமாக ( whatsapp dp) பயன்படுத்தி வருகிறார்.

cyber crime

இந்த நிலையில், அதே புகைப்படத்தை முகப்பாகக் கொண்ட ஒரு எண்ணில் இருந்து முக்கிய நபர்கள் பலருக்கும் வாட்ஸ் - அப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. ' வணக்கம் நான் தான் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு. அவசர தேவைகளுக்காக என்னுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட தொகையை செலுத்தி உதவுங்கள். அந்த பணத்தை பின்னர் உங்களுக்கு திருப்பி தருகிறேன்' என ஆங்கிலத்தில் அதில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த சிலர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

cyber crime

இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், இந்த மோசடி குறித்து உடனடியாக சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார் . 'என்னுடைய பெயரை பயன்படுத்தி வரும் போலி மெசேஜ்களை நம்பி யாரும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்' என எச்சரித்து வருகிறார்.

அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் காரணமான புகாரை அளித்த நிகிதா மீது கூறப்படும் மோசடி... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் காமாட்சி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.பணியை முடித்துக் கொண்டு நள்ளிரவ... மேலும் பார்க்க

விடுதி வளாகத்தில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி... சிவகங்கையில் சோகம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகள் பிருந்தா. இவர் காளையார்கோயில் அருகே ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் விடுதியில் தங்கி சகாயராணி பெண்கள் மேல்நிலைப... மேலும் பார்க்க

மும்பை: பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை; ஆசிரியைக் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

மும்பையில் உள்ள பிரபலமான ஆங்கில மீடிய பள்ளியில் 40 வயது ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதே பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனைக் கட்டாயப்படுத்தி நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்ற... மேலும் பார்க்க

அஜித்குமார் : `ஐஏஎஸ் உறவினரும் இல்லை; எந்த செல்வாக்கும் இல்லை; நாங்களே..!' - புகார் கொடுத்த நிகிதா

’’எங்கள் நகையைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தேன். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். இந்தப் பாவத்தை நாங்கள் எப்படி சுமப்போம் என்று நானும் அம்மாவும் ... மேலும் பார்க்க

'35 சவரன் நகைகளை இரவல் கொடுத்து இழந்த பெண்' - கணவன் கேட்டதால் தீக்குளித்த அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள செண்பகத்தறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். வெளிநாட்டில் வேலை செய்துவந்தார். இவருக்கும் ஊற்றுக்குழி பகுதியை சேர்ந்த ஶ்ரீஜா(37) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க