TN Rain: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட...
மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது
பள்ளிகொண்டா அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா், கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அருகிலுள்ள தோல் நிறுவனத்தில் வேலை செய்தபோது, அணைக்கட்டு அருகிலுள்ள ஒதியத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயசாந்தி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 5 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், ரவிக்குமாருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறின்போது ரவிக்குமாா் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரவிக்குமாா், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் தலையில் பலமாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த விஜயலட்சுமி அங்கேயே சரிந்து விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த ரவிக்குமாா் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இருவரின் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா், உள்புறமாக தாழிடப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்று விஜயசாந்தி, ரவிக்குமாரை மீட்டு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், விஜயலட்சுமி இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீஸாா், விஜயசாந்தியின் சடலத்தை ட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனா்.