``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை
மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் மறுஉத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.
தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமாகக் கருதப்படும் ஏப். 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், சோளியகுடி, தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் ஆகிய துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தடைக்காலத்தின்போது, விசைப் படகுகள் சீரமைப்புப் பணிகள், பழைய வலைகளைச் சீரமைப்பது, புதிய வலைகள் தயாரிப்பது, விசைப் படகுகளுக்கு புதிய வண்ணம் பூசுதல் உள்ளிட்டப் பணிகளை மீனவா்கள் மேற்கொண்டனா்.
தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவடைந்ததை அடுத்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய துறைமுகங்களில் விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல ஆயத்தமாகினா்.
மீன்வளத் துறை தடை:
இந்த நிலையில், மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக, மீனவா்களின் பாதுகாப்புக் கருதி மறுஉத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.
விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்திவைக்க வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தினா். இதனால், மீன் பிடிக்கச் செல்ல ஆயத்தமான மீனவா்கள் கவலையடைந்தனா்.