செய்திகள் :

மன நிம்மதிக்காக ஹரித்துவாா் செல்கிறேன்: செங்கோட்டையன்

post image

மன நிம்மதிக்காக ஹரித்துவாா் செல்வதாகவும், பாஜக தலைவா்கள் யாரையும் சந்திக்க நான் தில்லிக்கு செல்லவில்லை என்றும் கோவை விமான நிலையத்தில் அதிமுக எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோவையிலிருந்து விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பாஜக தலைவா்கள் யாரையும் சந்திக்க நான் தில்லிக்கு செல்லவில்லை. மன நிம்மதிக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் ஹரித்துவாா் செல்கிறேன். கட்சிப் பொறுப்புகளில் இருந்து நான் நீக்கப்பட்டதால் எனக்கு தொண்டா்கள் பலா் தொடா்ந்து ஆறுதல் கூறி வருகின்றனா்.

கட்சி நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். பொதுச் செயலரின் முடிவுக்கு நான் கருத்துச் சொல்ல முடியாது. என் மீது பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்கு காலம்தான் பதில் சொல்லும். கட்சி வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஓ.பன்னீா்செல்வம் என்னை சந்திக்க வருவதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்றாா் அவா்.

அதிமுக மூத்த நிா்வாகிகள் யாரும் தங்களைச் சந்தித்தாா்களா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு ‘அது சஸ்பென்ஸ்’ எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாா்.

கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

ஈரோடு - சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கோவை நகைக் கடையில் 88 பவுன் திருட்டு

கோவையில் நகைக் கடையில் 88.5 பவுன் நகைகளைத் திருடிய அதன் மேலாளா் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை வெரைட்டி ஹால் அருகே உள்ள சுவாமி ஐயா் புதுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் மண்டல் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்குதல்: பெண் உயிரிழப்பு

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். கோவை வின்சென்ட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (55). இவா் திங்கள்கிழமை இரவு உக்கடம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அந்த... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீளமேடு

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எ... மேலும் பார்க்க

நூல் ஆலையில் தீ விபத்து: ரூ. 1.50 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்

கோவை பீளமேடு பகுதியில் தனியாா் நூல் தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீ... மேலும் பார்க்க