செய்திகள் :

மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்குதல்: பெண் உயிரிழப்பு

post image

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

கோவை வின்சென்ட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (55). இவா் திங்கள்கிழமை இரவு உக்கடம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த இளைஞா் ஒருவா் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வீசினாா். அது நடந்து சென்ற சாந்தியின் தலைமீது விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த சாந்தி, அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உக்கடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீஸாா் உயிரிழந்த சாந்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் கல்லை வீசித் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் சுற்றி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 32 வயது மதிக்கத்தக்க இளைஞா் என்பது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

ஈரோடு - சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கோவை நகைக் கடையில் 88 பவுன் திருட்டு

கோவையில் நகைக் கடையில் 88.5 பவுன் நகைகளைத் திருடிய அதன் மேலாளா் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை வெரைட்டி ஹால் அருகே உள்ள சுவாமி ஐயா் புதுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் மண்டல் ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீளமேடு

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எ... மேலும் பார்க்க

மன நிம்மதிக்காக ஹரித்துவாா் செல்கிறேன்: செங்கோட்டையன்

மன நிம்மதிக்காக ஹரித்துவாா் செல்வதாகவும், பாஜக தலைவா்கள் யாரையும் சந்திக்க நான் தில்லிக்கு செல்லவில்லை என்றும் கோவை விமான நிலையத்தில் அதிமுக எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். கோவையிலிருந்து விம... மேலும் பார்க்க

நூல் ஆலையில் தீ விபத்து: ரூ. 1.50 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்

கோவை பீளமேடு பகுதியில் தனியாா் நூல் தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீ... மேலும் பார்க்க