செய்திகள் :

மயானத்துக்கு பாதை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

post image

அம்மாபேட்டை அருகே மயானத்துக்கு முறையான பாதை வசதி ஏற்படுத்தக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குருவரெட்டியூா் ஊராட்சி, பெரியாா் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள கல்லாங்காட்டில் புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனா். இந்த மயானத்துக்கு செல்ல முறையான பாதை இல்லை.

இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த ஜெயசீலன் (33) உயிரிழந்ததால், அவரது உடலை அடக்கம் செய்ய சனிக்கிழமை மயானத்துக்குச் சென்றபோது பலா் தடுமாறி விழுந்ததில் காயமடைந்தனா்.

இதையடுத்து, மயானத்துக்கு சாலை ஏற்படுத்தக் கோரி 50-க்கும் மேற்பட்டோா் குருவரெட்டியூா் - வெள்ளிதிருப்பூா் சாலையில் பெரியாா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க