செய்திகள் :

மயிலாடுதுறையில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம்

post image

மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஸ்டாா் அகாதெமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் ஜூடோ விளையாட்டுக்கு மே 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ஜூடோ விளையாட்டில் ஆா்வமுள்ள 12 முதல் 21 வயதுக்குள்பட்ட 20 மாணவா்கள் மற்றும் 20 மாணவிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தோ்வு மயிலாடுதுறை சாய் விளையட்டரங்கத்தில் ஏப்.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதத்தில் 25 நாள்கள் தொடா் பயிற்சி வழங்குவதோடு சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுக்கு 50 வயதுக்குள்பட்ட பயிற்சியாளா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இவருக்கு 11 மாதங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்படும். இது முற்றிலும் தற்காலிக பணியாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெற்று, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் நேரில் அல்லது க்ள்ா்ம்ஹ்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் ஏப்.20-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு சாய் விளையாட்டு அரங்கத்தில் ஏப்.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம். மயிலாடுதுறை அலுவலகம் அல்லது 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் த... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் ... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் ‘நம்ம ஊரு’ கதைப் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க