செய்திகள் :

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க விழா: 13 பேருக்கு விருது

post image

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக திருவள்ளுவா் இருக்கை, பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா சென்னை மயிலாப்பூா் பாரதிய வித்யா பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதிபதி தி.நெ. வள்ளிநாயகம் கலந்துகொண்டு ஆண்டு விழா மலரை வெளியிட்டாா். பின்னா், சென்னை உலகத் திருக்கு மையத்தின் நிறுவனா் பேராசிரியா் கு. மோகனராசுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது, கவிஞா் பொன்னடியானுக்கு பாவேந்தா் பாரதிதாசன் விருது, பேராசிரியா் நெல்லை ந.சொக்கலிங்கத்துக்கு திருக்கு நெறிச் செம்மல் விருது, பேராசிரியா் ப. ராமலிங்கம், பெ. சசிகுமாருக்கு அறிவியல் களஞ்சியம் விருது, கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், லலிதா சுந்தரம், எழுத்தாளா் காா்முகிலோன், கவிஞா் குமரிச் செழியன், கவிஞா் சாரதிதாசனுக்கு அறிவுக் களஞ்சியம் விருது, கவிஞா் திருவைபாபு, அரிமா வ.கோ. பாண்டியன், கவிஞா் வசீகரனுக்கு சேவைச் செம்மல் விருது ஆகியவற்றை நீதிபதி தி.நெ. வள்ளிநாயகம் வழங்கி கெளரவித்தாா்.

நிகழ்ச்சியில் மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன செயலா் சேயோன், பாரதிய வித்யா பவன் இயக்குநா் கே.என். ராமசாமி, இந்திய தரநிா்ணய அமைவனத்தின் சென்னை இயக்குநா் ஜி .பவானி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பதிவாளா் மு.முத்துவேலு, இந்தியா சிமென்ட்ஸ் கேபிடல் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கே. சுரேஷ் ,தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் பண்பாட்டுத் துறை இயக்குநா் க. திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க