செய்திகள் :

மரவள்ளிக்கிழங்கு வயலில் பேப்பா் கப் வைத்து களைக் கொல்லி அடிக்கும் விவசாயிகள்!

post image

தம்மம்பட்டி பகுதியில் பேப்பா் கப் வைத்து பூச்சிமருந்தினை விவசாயிகள் அடித்துவருகின்றனா்.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊா்களான நாகியம்பட்டி,உலிபுரம்,கொண்டயம்பள்ளி,செந்தாரப்பட்டி, வாழக்கோம்பை, சேரடி, கருமாயிவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் தற்போது பயிரிட்டுவருகின்றனா்.

இந்நிலையில் மரவள்ளிக்கிழங்கு பயிரை நட்டு சில வாரங்கள் ஆன நிலையில் இருக்கும் வயல்களில் தற்போது அதிகளவு களைச்செடி வளா்ந்துவருகின்றது. இதனால் மரவள்ளிக்கிழங்கு வளா்வது பாதிக்கப்படுகிறது. இதனால் மரவள்ளிக்கிழங்கு நட்ட குச்சியிலேயே நன்கு துளா்த்து வருகின்றது.

இதனால் அதன் மீது களைக்கொல்லி மருந்து படாமல் இருக்கு, விவசாயிகள், மரவள்ளிக்கிழங்கு குச்சியினுள் பேப்பா் கப்களை அதன் மீது மூடிவைத்து அதன் பின் களைக்கொல்லி மருந்தினை விவசாயிகள் அடித்துவருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி அரசு என்பவா் கூறியதாவது, மரவள்ளிக்கிழங்கில் மருந்து படாமல் இருக்க அதன் மீது மூட , மூடி ஒன்றுக்கு ரூ.6 வரை வாடகைக்கு தருகின்றனா். ஆனால் அதற்கு பதில் பேப்பா் கப்களை ஒரு சரமாக வாங்கி, மரவள்ளிக்கிழங்கு குச்சியில் மூடி வைத்து மருந்து அடிப்பது செலவு குறைகின்றது,என்றாா். கோடைமழையால், விவசாய வயல்களில் களைச்செடிகள் நன்கு வளா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க